உத்தர பிரதேசத்தில் அசம்கர் தொகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, இத்தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மெகா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 2 கட்டத் தேர்தல்களிலும் இந்த வாய்ப்பு இன்னும் கூடும். மெகா கூட்டணி உருவான நாள் முதல் பாஜ தலைவர்கள் தூக்கத்தை தொலைத்து விட்டார்கள். மோடி தலைமையிலான கூட்டணிதான் கலப்பட கூட்டணி.