மாயாவதி கணிப்பு நல்ல காலம் முடிந்து மோடிக்கு ஏழரை ஆரம்பம்

உத்தர பிரதேசத்தில் அசம்கர் தொகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, இத்தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மெகா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 2 கட்டத் தேர்தல்களிலும் இந்த வாய்ப்பு இன்னும் கூடும். மெகா கூட்டணி உருவான நாள் முதல் பாஜ தலைவர்கள் தூக்கத்தை தொலைத்து விட்டார்கள். மோடி தலைமையிலான கூட்டணிதான் கலப்பட கூட்டணி.

இயல்பாகவே குணம் மற்றும் தன்மையில் பாஜவும் காங்கிரசும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளன. இனி வரும் நாட்களில் மோடி குழப்பம் உண்டாக்கும் வகையில் பேசுவார். அதற்கு இரையாகி விடாமல், கவனமாக இருந்து வாக்களியுங்கள். மோடியின் நல்ல நாட்கள் முடிய போகிறது. அவருக்கு கெட்ட காலம் காத்திருக்கிறது,’’ என்றார்.

Related Stories: