தெஹ்ரான் : 2015ம் ஆண்டு சர்வதேச நாடுகளுடன் ஏற்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து முக்கிய உறுதிமொழிகளில் இருந்து பின் வாங்குவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் அணுஆயுத செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் 2015ம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகள் ஈரானுடன் அணு சக்தி ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்த பன்னாட்டு ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கா திடீரென விலகியது, ஈரான் மீது தடைகளையும் விதித்து வருகிறது.