செக்ஸ் புகாரில் சிக்கிய ஈரோடு ரியல் எஸ்டேட் அதிபர் மீது மேலும் 3 பிரிவுகளில் வழக்கு

ஈரோடு:  செக்ஸ் புகாரில் சிக்கிய ரியல் எஸ்டேட் அதிபர் மீது பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் 5 நாட்களுக்கு பிறகு மேலும் 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். ஈரோடு வில்லரசம்பட்டியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (37). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், பாலியல் பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி வந்ததாக பாதிக்கப்பட்ட ஒரு கல்லூரி மாணவி 26ம் தேதி ஈரோடு மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, ஈரோட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மனைவி ஒருவரும் 2ம் தேதியன்று எஸ்.பி.யிடம் புகார் அளித்திருந்தார்.

அதன்படி, விசாரணை நடத்தி சிறையில் உள்ள ராதாகிருஷ்ணன் மீது 5 நாட்களுக்கு பிறகு நேற்று கற்பழிப்பு, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஏற்கனவே, கல்லூரி மாணவி அளித்த புகாரை வைத்து 2 வழக்குகளில் 7 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது, ஆட்டோ டிரைவரின் மனைவியும் புகார் அளித்ததால் ராதாகிருஷ்ணன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: