ஈரோடு: செக்ஸ் புகாரில் சிக்கிய ரியல் எஸ்டேட் அதிபர் மீது பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் 5 நாட்களுக்கு பிறகு மேலும் 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். ஈரோடு வில்லரசம்பட்டியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (37). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், பாலியல் பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி வந்ததாக பாதிக்கப்பட்ட ஒரு கல்லூரி மாணவி 26ம் தேதி ஈரோடு மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, ஈரோட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மனைவி ஒருவரும் 2ம் தேதியன்று எஸ்.பி.யிடம் புகார் அளித்திருந்தார்.