துப்பாக்கியால் சுட்டு தலைமை காவலர் தற்கொலை

புதுடெல்லி: புதுடெல்லியில் தலைமை காவலர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். மேற்கு டெல்லியில் உள்ள ஹரிநகர் காவல் நிலையத்தில் தலைமை காவலரான சதீஷ் குமார் (50), தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது மகன் அசாமில் விமானப்படையில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சதீஷ் குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, காவலர் குடியிருப்பில் 4வது மாடியில் உள்ள தனது வீட்டில் சர்வீஸ் ரிவால்வரால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள விகாஸ்புரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சதீஷ் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் தோட்டாவும் கைபற்றப்பட்டிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். காவலரின் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: