வரலாற்று சாதனைகளை புரிந்த ராஜிவை கொச்சைப்படுத்துவதா?: மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் பிரதமராக பல சாதனைகளை புரிந்து இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் நிலை நிறுத்தியவர் ராஜிவ்காந்தி. இத்தகைய வரலாற்று சாதனைகளை புரிந்த ராஜிவ்காந்தியை கொச்சைப்படுத்துகிற வகையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது  மிகுந்த நாகரீகமற்ற செயலாகும்.

பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு மறைந்த ஒரு மாபெரும் தலைவரை 28 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி இழிவாக பேசியிருப்பது எத்தகைய அநாகரீகம் என்பதை கொஞ்சம் கூட கருதாமல் நாட்டின் பிரதமரே இவ்வாறு பேசியிருப்பது எவ்வளவு தரம் தாழ்ந்த செயல் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. ஐந்தாண்டு கால ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க துணிவில்லாத பிரதமர் மோடி, ராஜிவ்காந்தியை கொச்சைப்படுத்துவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய இழிவான, அநாகரீக பேச்சுக்கு உரிய தண்டனையை பெறுவதில் இருந்து நரேந்திர மோடி தப்ப முடியாது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: