ரம்ஜான் நோன்பை முன்னிட்டு மசூதிகளுக்கு இலவச அரிசி வழங்க ஒப்புதல் வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய கடிதம்: இஸ்லாமியர்களின் பண்டிகையாகிய ரம்ஜான் வர இருப்பதையொட்டி மே 7ம் தேதி முதல் இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு துவங்குகிறது. ஆண்டுதோறும் இப்பண்டிகைக்காக பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியினருக்கு மசூதிகள் மூலமாக அரசு நோன்புக் கஞ்சிக்காக இலவச அரிசி வழங்கி வருகிறது.

இந்த ஆண்டும் இதை வழங்கும் பொருட்டு மாநில உணவு வழங்கல் துறை அரிசி வழங்க பரிந்துரையை தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இந்த ஆண்டும் இஸ்லாமியர்களின் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு இந்தப் பரிந்துரையை நிறைவேற்றுவதற்கு தலைமை தேர்தல் அதிகாரி உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: