சென்னை: தமிழகத்தில் பிரபலமான கட்டிட நிறுவனங்களில் ஒன்றான விஜிஎன் பிராபர்ட்டி டெவலப்பர்ஸ் கடந்த 2013ல் கிண்டியில் உள்ள இந்துஸ்தான் டெலிபிரிண்டர் நிறுவனத்தின் இடத்தை ரூ.272 கோடிக்கு ஏலம் எடுத்தது. அந்த இடத்தில் விஜிஎன் 1600 அடுக்குமாடி குடியிருப்புகளைக்கொண்ட கட்டிடங்களை கட்டத்தொடங்கியது. முதல்கட்டமாக 500 அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த 2015ல் கட்டப்பட்டன. இந்நிலையில், இந்துஸ்தான் டெலிபிரிண்டர்சிடம் இருந்து இடத்தை வாங்கியதில் கூட்டுச்சதி நடைபெற்று அதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.115 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய சிபிஐ ஸ்டேட் பாங்க் துணை பொது மேலாளர் லியோன் தெரட்டில் (ஐதராபாத்), தலைமை மேலாளர் என்.ராமதாஸ் (ெபங்களூர்), இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் தலைமை அதிகாரி டி.பி.குப்தா, விஜிஎன் நிர்வாக இயக்குநர் வி.பிரதிஷ் தேவதாஸ், விஜிஎன் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தது.