புதுடெல்லி: தன் மீதான சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கை ரத்து செய்யக்கோரி ராபர்ட் வதேரா தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பொது செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்துக்கள் வாங்கியதில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ராபர்ட் வதேரா, அவரது நெருங்கிய உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், தன் மீதான சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கை ரத்து செய்யக்கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா மனு தாக்கல் செய்தார்.