துபாய்: துபாய் நகரத்திற்கு ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருகின்றனர். அழகிய கடற்பகுதியை கொண்ட துபாய் நகரத்தில், பஸ், மெட்ரோ ரயில் என பொதுமக்களுக்கான போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. அதோடு நீர் வழி போக்குவரத்தும் உள்ளது. துபாய் கிரிக் பகுதியில் கடல் நீரால் கால்வாய் ஏற்படுத்தி நீர் வழி போக்குவரத்து செயல்பட்டு வருகிறதுமேலும் துபாய் தேரா பகுதியில் இருந்து பர்துபாய் எனப்படும் பகுதி 10.3 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு கடல் வழியாக செல்வதற்கு அப்ரா எனப்படும் பாரம்பரிய படகு போக்குவரத்து பல்லாண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது.