தேர்தலுக்காக ராணுவத்தின் தியாகங்களை பயன்படுத்துவது வெட்கக்கேடானது: மன்மோகன் சிங் காட்டம்

டெல்லி: பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை பிரதமர் மோடி தேர்தல் காலத்தில் வாக்குகளுக்காக பயன்படுத்துவது வெட்கக்கேடானது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல்வேறு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடைபெற்றதாகவும், அவற்றை தேர்தலில் வாக்குகளுக்காக ஒருபோதும் பயன்படுத்தியதில்லை எனவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜக அரசின் பல்வேறு தோல்விகளை மறைப்பதற்காகவே ராணுவ நடவடிக்கைகள் அரசியலாக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ராணுவத்தின் தியாகங்களை தேர்தலுக்காக மோடி அரசு பயன்படுத்திக் கொள்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பாஜகவின் இத்தகைய செயல்கள் வெட்கக்கேடானவை என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: