மும்பை: மராட்டிய மாநிலம் கட்சிரோளியில் அதிரடிப்படை வாகனம் மீது மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டு வீசி நடத்திய தாக்குதலில் 16 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் மக்களவை தேர்தலுக்கான 4வது கட்ட வாக்கு பதிவு மகாராஷ்டிராவில் நடந்து முடிந்தது. இதனையடுத்து அதிரடிப்படையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று மகாராஷ்ட்டிராவைச் சேர்ந்த சி60 என்ற கமாண்டோ பிரிவைச் சேர்ந்தவர்கள் ஒரு பேருந்து வாகனத்தில் கட்சிரோளி பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தனர். கமாண்டோ படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு வீசி மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.