மக்களவை தேர்தல் கடந்த 11ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மக்களவை தேர்தலில் மக்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிக்கும் வகையில் துணை ராணுவ வீரர்கள், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை இல்லாத வகையில், இந்த தேர்தலில்தான் அதிகபட்ச வீரர்கள், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக மததிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் 2,710 துணை ராணுவ கம்பெனியினர் மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஒரு கம்பெனி என்பது 100 துணை ராணுவ வீரர்களை கொண்டது. இதன்படி, 2.71 லட்சம் துணை ராணுவத்தினர் பல்வேறு பகுதி வாக்குப்பதிவு மையங்களில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.