அண்ணாநகர்: அரும்பாக்கம், ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன், நள்ளிரவில் வாலிபர்கள் சிலர் மது போதையில், கையில் பட்டாக்கத்தியை வைத்துக் கொண்டு சாலையில் நடந்து சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை மிரட்டி தகராறு செய்தனர்.
இதனால், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்து அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் வருவதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.