ஜெய்ப்பூர்: இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக டீ காக் 65, சூர்யகுமார் யாதவ் 34, ஹர்திக் பாண்டியா 23 ரன்கள் எடுத்தனர். 162 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.