காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள மகரிஷி பள்ளியில் நேற்று காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வாக்களித்தனர். காலை 9.10 மணியளவில் சிவகங்கை தொகுதி பாஜ வேட்பாளரும், அக்கட்சியின் தேசியச் செயலருமான எச்.ராஜா குடும்பத்தினருடன் வாக்களிக்க வந்தார்.அங்கு வரிசையில் நிற்காமல், குடும்ப உறுப்பினர்களுடன் அதிரடியாக வாக்குசாவடிக்குகள் நுழைந்து வாக்களித்தார். அவர்கள் வாக்களித்து செல்லும் வரை மற்றவர்களை தேர்தல் ஊழியர்கள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதனால் 20 நிமிடம் வாக்காளர்கள் காத்திருந்தனர்.