இலங்கை புத்தாண்டு கொண்டாட்டங்களில் சாலை விபத்தில் 30 பேர் பலி; 200-க்கும் மேற்பட்டோர் காயம்

கொழும்பு : இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துக்களில் 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கையில் கடந்த 14-ம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்நாட்டு அரசு உள்ளூர் விடுமுறை விட்டது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சுமார் 8,000 போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர். குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக சுமார் 1,270 பேர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 34,000 வாகன ஓட்டுனர்கள் மீது சாலை விதிகளை மீறியதாக புகார் பதிவாகி உள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: