காங்கயம்: காங்கயம் பஸ் நிலையம் முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பிரசாரத்தில் வெகு நேரமாக வெயிலில் காத்திருந்த இளம்பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறனை ஆதரித்து காங்கயம் பேருந்து நிலையம் முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக மதியம் 2 மணியில் இருந்து பிரசாரம் நடக்கும் இடத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஒருமணிநேரத்தில் நீங்கள் திரும்ப சென்று விடலாம் என தெரிவித்து ஆட்களை அழைத்து வந்து காத்திருக்க வைத்தனர். தொண்டர்கள் முதல்வரின் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால், முதல்வர் தாமதமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாலை 5.30 மணியளவில் காங்கயம் வந்து தனது பேச்சை துவக்கினார்.அப்போது, மதியம் 2 மணியில் இருந்து வெயிலில் காத்திருந்த இளம்பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.