மும்பை: தமிழில் ‘காதலர் தினம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சோனாலி பிந்த்ரே. இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், வெளிநாட்டில் சிகிச்சை பெற்று குணமாகி மீண்டு வந்து இருக்கிறார். இந்நிலையில், மும்பையில் சிஏஎச்ஓ அமைப்பு ஏற்பாடு செய்த சர்வதேச மருத்துவ கருத்தரங்கில், சோனாலி பிந்த்ரே பேசியதாவது: புற்றுநோய் மிகவும் கொடியது; வலி வேதனையை அளிப்பது. நோயை தொடக்கத்திலேயே கண்டறிவது மிக அவசியம். இதன் மூலம் எளிதில் மீளமுடியும்.செலவும் குறையும். வலி வேதனையும் பெரிதாக இருக்காது. முற்றிய நிலையாக இருந்தால் வேதனை மட்டுமல்ல, சிகிச்சை செலவும் மிக அதிகமாக இருக்கும். எனக்கு இப்படி ஒரு நோய் வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்த எனது ரசிகர்கள், பொதுமக்கள், தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.