மத்திய பாஜ அரசு அமல்படுத்திய நீட் தேர்வு படுத்தியபாடு ெகாஞ்சநஞ்சமல்ல. நீட் தேர்வை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த தேர்வை அமல்படுத்த தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு, எதிராகவும் போராட்டம் நடத்தப்பட்டது. அதையும் மீறி, நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வால் பிளஸ் 2 தேர்வில் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்த அனிதா என்ற மாணவிக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்கவில்லை. இதனால், அவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால், மீண்டும் நீட் தேர்விற்கு எதிராக பெரும் கிளர்ச்சி எழுந்தது. இதை தொடர்ந்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது மாநில அரசு.