போலீஸ்காரருக்கு சரமாரி கத்திக்குத்து

சென்னை: செங்குன்றம் பம்மதுகுளம் அரசு மேல்நிலை பள்ளி அருகே நேற்று காலை 2 பேர் பட்டாக்கத்தியுடன் பைக்கில் வந்து இறங்கினர். இதை பார்த்த அதே பகுதி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ்காரர் சாக்ரடீஸ் (28), அவர்களை தட்டிக்கேட்டுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சாக்ரடீசின் கைகளில் சரமாரியாக கத்தியால் குத்தினர். இவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து 2 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் காயமடைந்த போலீஸ்காரரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், பிடிபட்ட இருவரும் புழல் காவாங்கரையை சேர்ந்த மதன்குமார் (22), செங்குன்றம் சோலையம்மன் நகரை சேர்ந்த தர் (19) என்பதும், அதே பகுதி வாலிபரை கொலை செய்ய பட்டாக்கத்தியுடன் வந்ததும் தெரிந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பட்டாக்கத்தி  மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: