அன்புமணி இளைஞர் 50 வயதுதான் ஆகிறது... பிரேமலதா கிண்டல்

தர்மபுரி நான்கு ரோடு அருகே அதிமுக கூட்டணியின், பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து, தேமுதிக பொருளாளர் பிரேமலதா நேற்று  பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: அரசியலில் உள்ள இளைஞர்களில் மிகவும் சிறந்தவர் அன்புமணி. தமிழகம் முன்னேற வேண்டுமென தொலைநோக்குப் பார்வையோடு, திட்டங்களை பற்றி பேசுபவர். வருங்கால  தமிழகம் இளைஞர்கள் கையில்தான் உள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் சுதீஷ், அன்புமணி,  சரவணன் போன்ற ஒருசிலர்தான் இளைஞர்கள்.

மத்திய சுகாதாரத்துறையில், ஏற்கனவே மந்திரியாக இருந்த அன்புமணி, 108ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தவர். இவர் புகையிலை டாஸ்மாக்கை எதிர்த்தவர். அதன் விளைவாக புகைப்பிடிக்கும் பழக்கம், கணிசமாக குறைந்துள்ளது. இளைஞர்களை நல்வழிப்படுத்த இது போன்ற இளைஞர்கள் தேவை. இளைஞரான அன்புமணிக்கு 50வயது தான் ஆகிறது. அன்புமணி ஒரு யங் சாப் என பேசினார். அன்புமணியை பிரேமலதா புகழ்கிறாரா அல்லது கிண்டல் செய்கிறாரா என்று தெரியாமல் பாமகவினர் திகைத்தனர்.

ஊர் பெயரை மாற்றினார்...

‘மொரப்பூர்- தர்மபுரி’ என்பதற்கு பதிலாக ‘பெரம்பூர் -தர்மபுரி’ இணைப்பு ரயில் பாதை திட்டத்தை கொண்டு வந்தவர் அன்புமணி என ஊர்பெயரை மாற்றிக்கூறினார் பிரேமலதா.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: