புதுடெல்லி: நாட்டிற்குள் 23 லட்சம் மதிப்பு தங்கம் கடத்த முயன்ற சீனா நபர் ஏர்போர்ட் சுங்க அதிகாரிகளிடம் வசமாக சிக்கினார்.ஹாங்காங்கில் இருந்து நேற்று வந்த விமானத்தில் பயணித்த சீனா நபர், இந்திராகாந்தி ஏர்போர்ட்டில் வழக்கப்படியான சோதனைக்கு வரிசையில் நின்றிருந்தார். அவரது முறை வந்த போது, தனது உடலிலும், உடைமைகளிலும் ஒரு தங்க செயின், தங்க கட்டி, மற்றும் தங்க வளையல் என 734 கிராம் எடைக்கு அவர் தங்கம் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது.