திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை போன்று சித்ரா பவுர்ணமி விழாவும் சிறப்பாக நடைபெறும். சித்ரா பவுர்ணமியின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். அதன்படி, வரும் 19ம் தேதி சித்ரா பவுர்ணமி நாளன்று பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால், பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் கோயில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சித்ரா பவுர்ணமிக்கு சில நாட்களே உள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.