ராஜேந்திரபாலாஜி லகலக மோடி - கிருஷ்ணர், எடப்பாடி - அர்ஜூனர்

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் இருந்து யாரையும் பிரிக்க முடியாது. கூட்டணியில் கல்லெறிந்து பிரிக்கலாம் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் முடியாது. தேசியத்தையும், தெய்வீகத்தையும் காப்பாற்றும் எங்கள் கூட்டணி. நாங்கள் பள்ளிவாசலில் தொழுகையும், சர்ச்சில் பிரார்த்தனையும் செய்வோம். அனைத்து கோயில்களிலும் சாமியும் கும்பிடுவோம்.

மகாபாரதத்தில் கிருஷ்ணர் தலைமையில், அவரது ஆலோசனைப்படி பஞ்ச பாண்டவர்கள் வெற்றி பெறுவர். நாங்கள் பஞ்சபாண்டவர் அணியைப் போல வெற்றி பெறுவோம். தேர்தல் யுத்தத்தில் மோடிதான் எங்களின் கிருஷ்ணர். அர்ஜூனராக முதல்வர் பழனிசாமி உள்ளார். எட்டு வழிச்சாலையை பொதுமக்கள் எதிர்த்தால், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அந்த திட்டத்தை கைவிடலாம். 8 வழிச்சாலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொதுமக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: