மைசூருவில் ஏப்.14ம் தேதி மாயாவதி பிரசாரம்: பிஎஸ்பி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார்

சாம்ராஜ்நகர்: மைசூருவில் ஏப். 14-ம் தேதி நடைபெறும் பி.எஸ்.பி. தேர்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவி மாயாவதி கலந்து கொள்கிறார். இந்த தகவலை முன்னாள் அமைச்சர் என்.மகேஷ் தெரிவித்தார். சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா குருபனகட்டே கிராமத்தில் பி.எஸ்.பி. கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் என். மகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது நாட்டில் வறுமையை ஒழிக்க எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. அதே போல் தற்போது ஆட்சியில் உள்ள பா.ஜவும் எந்த திட்டத்தையும் அமல்படுத்தவில்லை. இதனால் இரண்டு கட்சிகளையும் புறக்கணிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர்.

மத்தியில் மாயாவதி தலைமையிலான ஆட்சி அமைந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். அதே போல் திருமணமாகாத ஏழை பெண்களின் திருமணங்களுக்கு உதவி தொகை வழங்கப்படும். சாம்ராஜ்நகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பி.எஸ்.பி. வேட்பாளர் சிவகுமார் நிச்சயம் வெற்றிபெறுவார். இவரை ஆதரித்து ஏப்ரல் 14-ம் தேதி மைசூருவில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் கட்சி தலைவர் மாயாவதி கலந்து கொண்டு ஆதரவு திரட்டுகிறார் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: