வாக்குச்சாவடிக்கு சென்று எவ்வாறு வாக்களிக்க வேண்டும், வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவி பேட் இயந்திரத்தை வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் “சுனோ பாத்சாலா” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு குழு வீதம் 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவில் 14 முதல் 17 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள், 18 மற்றும் 19 வயதுள்ள வாக்காளர்கள், இளம் வயது பெண்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், அந்தப் பகுதிகளில் உள்ள சமூகத்தின் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். இவர்களுக்கு வாக்குச்சாவடிகளில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பான வாக்குச்சாவடி கல்வி அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.