ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலி: 4 பேர் படுகாயம்

மாஸ்கோ: ரஷியா தலைநகர் மாஸ்கோவில் உள்ள குரோபோட்கின்ஸ்கை என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷியா தலைநகர் மாஸ்கோவில் உள்ள குரோபோட்கின்ஸ்கை என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன.  இந்த நிலையில், நேற்று அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதனையடுத்து தீயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீயில் சிக்கி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: