மாஸ்கோ: ரஷியா தலைநகர் மாஸ்கோவில் உள்ள குரோபோட்கின்ஸ்கை என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷியா தலைநகர் மாஸ்கோவில் உள்ள குரோபோட்கின்ஸ்கை என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், நேற்று அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதனையடுத்து தீயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.