பாஜ வேட்பாளராக துர்காபூரில் அலுவாலியா போட்டி

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள துர்காபூர் மக்களவை தொகுதி வேட்பாளராக மத்திய அமைச்சர் எஸ்எஸ் அலுவாலியாவை பாஜ நேற்று அறிவித்தது. இவர், கடந்த மக்களவை தேர்தலில் டார்ஜிலிங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இது குறித்து அலுவாலியா கூறுகையில், “எனது வாழ்க்கையில் நான் எங்கு அதிக பாடங்களை கற்றுக்கொண்டேனோ அங்கு எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது மாணவர் பருவத்தை துர்காபூரில்தான் கழித்தேன். பர்த்வான் பல்கலைக் கழகத்தில் தான் படித்தேன்” என்றார். மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக பாஜ இதுவரை 408 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: