புதுக்கோட்டை: திருச்சி தொகுதி தேமுதிக வேட்பாளர் வி.இளங்கோவனுக்கு வாக்கு சேகரித்து புதுக்கோட்டையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: புதுக்கோட்டையில் இருந்துதான் ராணுவத்தில் அதிகமானோர் பணிபுரிவது பெருமைக்குரியது. இம்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். மாநில அரசும், மத்திய அரசும் இந்தக் கூட்டணியில்தான் உள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணியே வெற்றி பெறும். இந்த கூட்டணி மக்களுக்கு என்னென்ன செய்யும் என்று வாக்குறுதி அளித்து வருகிறது ஆனால், குட்கா புகழ் அமைச்சர் என்று விஜபாஸ்கரை ஸ்டாலின் சொல்கிறார். (இதை கேட்ட அதிமுக தொண்டர்கள் கடுப்பானார்கள். பிரேமலதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோபத்துடன் கோஷமிட்டனர். இதனால் அவரால் சிறிது நேரம் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் சமாளித்துக் கொண்டு ெதாடர்ந்து பேசினார்.