நியூசிலாந்த்: நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட குற்றவாளி 50 கொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள இருப்பதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் தரப்பில், நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச்சில் உள்ள இரண்டு மசூதிகளில் தாக்குதல் நடத்திய குற்றவாளி 50 கொலை குற்றச்சாட்டுகளை எதிர் கொள்ள இருக்கிறார். மேலும் 36 பேரை கொலைச் செய்ய முயன்றதாக அவரது மீது வழக்கு பதிவு செய்யப்படுள்ளது. இந்த வழகில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் கடந்த மாதம் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.