மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை நேரில் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் ஏப்ரல் 8-ம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் www.maduraimeenakshi.org என்ற இணையதளம் மூலம் ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.