மதுரை: தமிழகம் முழுவதும் பேருந்து நிலையம், கோவில் உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவச கழிப்பறை வசதியை ஏற்படுத்த உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.