அனிதா ராதாகிருஷ்ணன் தோட்டத்தில் பறக்கும் படையினர் மீண்டும் சோதனை

உடன்குடி: தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழிக்கு ஆதரவாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறார். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 29ம் தேதி அன்று தண்டுபத்துவில் உள்ள அனிதாவின் பண்ணைத் தோட்டத்தில் தீவிர சோதனை நடத்தினர்.

 ஆனால் எதும் சிக்கவில்லை. இந்நிலையில், நேற்று மாலை 6.45 மணிக்கு தண்டுபத்து கிராம நிர்வாக அதிகாரி வெங்கடேசன் முன்னிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வி, திருச்செந்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலதா மற்றும் ஏராளமான போலீசார் 3 வாகனங்களில் அனிதாவின் அதே தோட்டத்தில் மீண்டும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.  இந்த முறையும் அவர்களுக்கு ஒன்றும் சிக்கவில்லை. இதனால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன்  புலம்பிக் கொண்டு சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: