துபாய்: ஏப்ரல் முதல் நாள் முட்டாள் தினமாக அனுசரிக்கப்படுவதால், அன்று எப்படியாவது மற்றவர்களை ஏமாற்றிவிட வேண்டும் என்று நண்பர்கள்தான் போராடுவார்கள். ஆனால், சமீபகாலமாக நிறுவனங்கள் கூட வாடிக்கையாளர்களிடம் விளையாட ஆரம்பித்துவிட்டன.உலகளவில் புகழ்பெற்ற விமான நிறுவனங்களில் ஒன்று துபாய் எமிரேட்ஸ் விமான நிறுவனம். இந்நிறுவனம் நேற்று தனது டிவிட்டர் பதிவில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், ‘‘சிறிய அளவிலான ஹெலிகாப்டர் போன்ற பயணிகள் செல்லும் தானியங்கி டிரோன் விமானத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் முதல் வகுப்புக்கான சொகுசு வசதிகள் இருக்கும். நவீனமாக வடிவமைக்கப்பட்ட இந்த டிரோன்கள் துபாயில் இருந்து, நகரின் அனைத்து இடங்களுக்கும் செல்லும் வகையில் இயக்கப்படும்.