குண்டூரில் பஸ் பிரசாரம் மேற்கொண்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளாவின் தங்க மோதிரத்தை மர்மநபர் திருடி சென்றார். ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா பஸ் யாத்திரை மேற்கொண்டு அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி, நேற்று குண்டூரில் பஸ்சில் இருந்தபடி ஷர்மிளா பிரசாரம் மேற்கொண்டார்.