பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக பெண் ஆடியோ யூ-டியூப் நிறுவனத்துக்கு சிபிசிஐடி கடிதம்

கோவை: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக சமீபத்தில் ஒரு பெண் ஆடியோ வெளியிட்டிருந்தார். அதில், திருநாவுக்கரசு கும்பலால் சிறுமி ஒருவர் தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டதால் இறந்தார். அந்த சிறுமியின் உடலை திருநாவுக்கரசின் பண்ணை வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர் என்று கூறி கூறியிருந்தார். இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ஆடியோவின் உண்மை தன்மை, அதனை பதிவு செய்தது யார்? என்பது குறித்த தகவல்களை பெறுவதற்காக யூ-டியூப் நிறுவனத்துக்கு சிபிசிஐடி போலீசார் இ-மெயில் மூலமாக கடிதம் அனுப்பி உள்ளனர்.  

ஏற்கனவே பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக வெளிவந்த ஆபாச வீடியோ குறித்து யூ-டியூப் நிறுவனத்துக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம் அனுப்பி இருந்தனர். அதற்கு அனைத்து வீடியோவும் அழிக்கப்பட்டு விட்டதாகவும், மார்பிங் செய்யப்பட்ட வீடியோ மட்டும் இருப்பதாகவும் யூ டியூப் நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் 2-வது முறையாக யூடியூப் நிறுவனத்துக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: