கன்னிவாடியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பாமக வேட்பாளருக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ‘ஆப்பிள்’ சின்னத்திற்கு வாக்களிக்கும்படி மாற்றி கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கான பாமக வேட்பாளர் ஜோதிமுத்து அறிமுக கூட்டம் கன்னிவாடியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘ஜோதிமுத்துவை ஆதரித்து ஆப்பிள் சின்னத்தில் அனைவரும் ஓட்டளியுங்கள்’’ என்றார். இதை கேட்டு கூட்டத்தினர் உடனே கத்தினர். பேச்சை நிறுத்திய அமைச்சர், ‘‘என்னங்க.. என்னங்க..’’ என்று சத்தமிட்டு கேட்டார். கூட்டத்தில் இருந்தவர்கள், ‘‘வேட்பாளரின் சின்னம் ஆப்பிள் இல்லை.