சென்னை: தேர்தல் நடத்தை விதியை மீறியதாக அமமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் மீது திருவள்ளூர் மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணிக் கட்சிகள், அதிமுக, அமமுக உட்பட பல்வேறு கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அமமுக வேட்பாளர்களுக்காக அக்கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆவடியில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில், செவ்வாப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் அமமுக திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து டிடிவி.தினகரன் பிரசாரம் மேற்கொண்டார்.