மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் போட்டியில் பிளிஸ்கோவா, ஹலேப் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றனர். ஆண்கள் பிரிவில் ஃபெலிக்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். அமெரிக்காவின் மயாமி நகரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டிகள் நடைப்பெற்றன. நேற்று நடைப்பெற்ற கடைசி காலிறுதிப் போட்டியில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, சக நாட்டு வீராங்கனை மார்கெடா வொண்டரவசோவா உடன் மோதினார். அதில் பிளிஸ்கோவா 6-3 , 6-4 என்ற நேர் செட்கணக்கில் மார்கெடாவை வீழ்த்த அரையிறுதிக்கு தகுதிப் பெற்றார். இந்திய நேரப்படி இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் எஸ்டோனியாவின் அனெட் கோன்டாவய்ட்(19வது ரேங்க்), ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்தி(11) உடன் மோத உள்ளார். தொடர்ந்து 2வது அரையிறுதியில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா(7வது ரேங்க்)), ரூமேனியாவின் சிமோனா ஹாலெப்(3) ஆகியோர் விளையாட உள்ளனர். இதே போல் நேற்று நடைப்பெறற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதிப் போட்டி ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- டெனிஸ் ஷபோவலாவ்(கனடா) இணை அமெரிக்காவின் மைக்கல் பிரயான் - பாப் பிரயான் இணையிடம் 6-3, 6-4 என்ற புள்ளி கணக்கில் தோற்று வெளியேறியது.