மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதியை கைப்பற்ற மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் திக்விஜய்சிங் மற்றும் சிவ்ராஜ்சிங் சவுகான் ஆகியோர் நேருக்கு நேர் மோத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் போபால் மக்களவை தொகுதியை கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் பாஜ இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. போபால் மாநிலத்தின் தலைநகர் என்பதால் அந்த தொகுதியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் இரண்டு கட்சிகளும் உள்ளன. இதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜ, பிரபலமான வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளன. அதன்படி, மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங்கை போபால் தொகுதியில் களமிறக்க கட்சி மேலிடம் முடிவு செய்து அவரை வேட்பாளராக அறிவித்தது.