சென்னை: சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. தமாகா சார்பில் மூத்த வக்கீல் ஞானதேசிகன் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் ஆஜரானார். அப்போது அவர், தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை தற்காலிகமாக ஒதுக்குவதற்கு பதில் நிரந்தரமாக ஒதுக்குமாறு வழக்கு தொடர உள்ளோம். இதை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். இதை நீதிபதிகள் ஏற்றனர்.