அகமதாபாத்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, மெஹ்சானா பகுதியில் பா.ஜ.,வின் தேர்தல் பிரசாரத்தை ெதாடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மே 23ம் தேதி வெளியாக உள்ள மக்களவை தேர்தல் முடிவுகளில் தவறுதலாக காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டால், பாகிஸ்தான் அந்த நாளை தீபாவளியாக கொண்டாடும். ஏனெனில் காங்கிரஸ் கட்சி அவர்களுக்கு அவ்வளவு நெருக்கமானது. மே 23ல் மோடியை வெற்றி பெற செய்ய வேண்டும் என நாட்டு மக்கள் அனைவரும் உறுதி எடுக்க வேண்டும். அப்போதுதான் அது பாகிஸ்தானுக்கு துக்கத்தையும், பயத்தையும் ஏற்படுத்தும். ராகுலின் ஆலோசகர் சாம் பிட்ரோடா, புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை சேர்ந்த 57 இளைஞர்கள் மீது குற்றம் சாட்டுவது தவறு என்கிறார்.