சண்டீகர்: பஞ்சாப்பில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பிரசாரம் இல்லாதது அதிசயமாக உள்ளது. இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான், மிக அதிகளவில் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். வெளிநாடுவாழ் இந்தியர்களான இவர்கள், ஒவ்வொரு தேர்தலின்போதும், தங்களின் பங்களிப்பை அரசியல் கட்சியினருக்கு வழங்கி வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது, வெளிநாடுகளில் நிதி திரட்டும் கூட்டங்களை நடத்தினர். அங்கு நிதியை திரட்டி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கட்சியினருக்கு வழங்கினர். மேலும், சமூக வலைதளங்களிலும் அதிகளவு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.