சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் நிச்சயமாக பங்கேற்பார் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று மாலை 4 மணி விமானத்தில் மதுரை புறப்பட்டு சென்றார், முன்னதாக. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேமுதிக 4 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. நாங்கள் தேர்தல் அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. ஆனால் அதே நேரத்தில் எங்களது கூட்டணி கட்சிகளான பாஜ, அதிமுக தேர்தல் அறிக்கையில் அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்.