திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சேமநாராயணன் தீவிர பிரசாரம்: சென்னையில் குமரிஅனந்தன் தொடங்கி வைத்தார்

சென்னை: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சேமநாராயணன் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார். சென்னையில் பிரசாரத்தை  குமரி  அனந்தன் தொடங்கி வைத்தார். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம நாராயணன் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழகம்  முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து சேம நாராயணன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து நேற்று காலை தனது பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரத்தை  காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து சேம நாராயணன் மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட  பகுதிகளில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து தென்சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி  தங்கபாண்டியனை ஆதரித்து அவர் பிசாரத்தில் ஈடுபட்டார். அவர் திமுக முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார். பின்னர் நேற்று மாலையில் அவர்  சிதம்பரம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தில் அவர் பேசுகையில், “ மக்களவை மற்றும் சட்டசபையின் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி  மாபெரும் வெற்றி பெறும். திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து மக்கள் தேசிய கட்சி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம்”  என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: