`எங்களுக்கும் தனித்தொகுதி வேண்டும்’ மீனாட்சியம்மன் வேடத்தில் வந்து திருநங்கை மனுத்தாக்கல்

மதுரை: மதுரை மக்களவை தொகுதியில் திருநங்கை பாரதி கண்ணம்மா போட்டியிட முடிவு செய்துள்ளார். நேற்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக மதுரை கலெக்டர் அலுவலத்திற்கு, மீனாட்சி அம்மன் வேடமணிந்து வந்து, தேர்தல் அதிகாரியான கலெக்டர் நடராஜனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த அவர் கூறுகையில், ‘‘திருநங்கைகளின் நலனுக்காக பாடுபட்டு வருகிறேன். திருநங்கைகளுக்கு அனைத்து அதிகாரங்களும், உரிமைகளும் அளிக்கப்பட வேண்டும், தேர்தலில் தனி தொகுதி ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்குடன் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: