சென்னை: ரெப்கோ வங்கி, தனது பொன்விழா ஆண்டில், சிறப்பு மிக்க மைல்கல்லான 15,000 கோடி வர்த்தகத்தை கடந்துள்ளது. வங்கியின் வைப்பு நிதி 8,669 ேகாடி மற்றும் கடன் 6,337 கோடி உள்ளது. தொடர்ந்து லாபம் ஈட்டும் நிறுவனமாக செயல்பட்டு, கடந்த 5 ஆண்டாக 100 கோடிக்கு மேலான நிகர லாபத்தை கொண்டு செயல்படும் இந்த வங்கி, நடப்பு நிதியாண்டில் 110 கோடிக்கு மேலான நிகர லாபமும், பங்குதாரர்களுக்கு 20 சதவீத ஈவுத்தொகை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ளது. தாயகம் திருப்பியவர் நலனுக்காக தொடங்கப்பட்ட இந்த வங்கி, தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை மூலம், அவர்களுக்கு கல்வி, மருத்துவ உதவித்தொகை, ஆயுள் காப்பீடு செயல்படுத்தி வருகிறது. இவற்றுக்காக 7.20 கோடி செலவழித்து, தாயகம் திரும்பிய 37,500 பேர் பயன் பெற்றுள்ளனர். இது ரெப்கோ வங்கி வரலாற்றிலேயே முதல் முறை.