திருச்சி: தெலங்கானா சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் திட்டத்திற்கு திருச்சி பெல் நிறுவனம் 100வது எரிப்பான் பலகை அனுப்பி வைத்தது. பெல் குழுமம், தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டம் ராமகுண்டத்தில், என்டிபிசி நிறுவனத்திற்காக அமைத்து வரும் 800 மெகாவாட் சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின்னாலைக்கான எரிப்பான் பலகை திருச்சி பெல்லில் இருந்து அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பெல் திருச்சி, மின்னாலைக் குழாய்கள் பிரிவு திருமயம் மற்றும் குழாய்கள் மையம் சென்னை ஆகியவற்றின் செயலாண்மை இயக்குநர் ராஜாமனோகர் என்டிபிசி மற்றும் பெல் மூத்த அலுவலர்கள் முன்னிலையில் பெல் திருச்சியின் உயரழுத்தக் கொதிகலன் ஆலை, பிரிவு 2லிருந்து கொடியசைத்து அனுப்பி வைத்தார்.