மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: நான் காவலன் என்று மோடி கூறியிருக்கிறார். அவர் யாருக்கு காவலன். மோடி ஊழலில் ஈடுபடவில்லையா? இன்னைக்கு இந்திய நாட்டை பாதுகாப்பதற்காக ரபேல் என்ற போர் விமானத்தை வாங்கினீர்களே. 526 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டிய விமானத்தை ஆயிரத்து 600 கோடி ரூபாய் போட்டு வாங்கியிருக்கிறீர்களே. இவ்வளவு அதிகமான விலை ஏன் வந்தது. ஒரு விமானத்துக்கு இரண்டு மடங்கு விலை கொடுத்தீர்களே எதனால கொடுத்தீர்கள். அந்த பணம் யாருக்கு போய் சேர்ந்தது. இதுதானே இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. நான் என்ன கேட்கிறேன்னா?. நீங்க இந்த அஞ்சு வருஷத்துல கொடுத்த வாக்குறுதிய ஏதாச்சும் நிறைவேத்தினீங்களா. ஒரு விஷயத்துல மட்டும் பாராட்டினுங்க. மோடி மாதிரி ஒரு அதிபுத்திசாலிய நீங்க பாக்க முடியாது.