ஹிசார்: அரியானா மாநிலத்தில் 60 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது. அரியானா மாநிலம் ஹிசாரில் நதீம் என்ற ஒன்றரை வயது குழந்தை தனது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அருகில் உள்ள இடத்தில் 60 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, பாதுகாப்பாக மூடாமல் வைக்கப்பட்டிருந்தது. விளையாடிக்கொண்டிருந்த குழந்தை நதீம், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டது.