அரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது ஒன்றரை வயது குழந்தை

ஹிசார்: அரியானா மாநிலத்தில் 60 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது. அரியானா மாநிலம் ஹிசாரில் நதீம் என்ற ஒன்றரை வயது குழந்தை தனது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அருகில் உள்ள இடத்தில் 60 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, பாதுகாப்பாக மூடாமல் வைக்கப்பட்டிருந்தது. விளையாடிக்கொண்டிருந்த குழந்தை நதீம், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டது.

இத்தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ மீட்பு குழுவினர் மீட்பு உபகரணங்களுடன் விரைந்துள்ளனர்.

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுவாசிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜன் ட்யூப்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. மருத்துவ குழுவினரும் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: